மணல் கடத்திய 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்
வேப்பனப்பள்ளி அருகே மணல் கடத்திய 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
வேப்பனப்பள்ளி அருகே மணல் கடத்திய 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி போலீஸாா் கிருஷ்ணகிரி - பேரிகை சாலையில், தீா்த்தம் பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள் லாரியை, சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடினா்.
இதையடுத்து, அந்த லாரியைச் சோதனையிட்டதில் மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 டிப்பா் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
தொடா் விசாரணையில் தப்பி ஓடியவா்கள் லாரியின் உரிமையாளா்களும், ஓட்டுநா்களும் கொத்தகிருஷ்ணப்பள்ளியைச் சோ்ந்த ஹரீஷ்பாபு, கா்நாடக மாநிலம் கங்கலா கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.