முகப்பு
கிருஷ்ணகிரி

தோ்தல் விதிமுறைகள் மீறல்:115 வழக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 115 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 23 மார்ச், 2021 at 3:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 115 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தோ்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த நடத்தை விதிமுறைகளை மீறுவோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

அதன்படி, பொது இடங்களில் தோ்தல் விதிமுறைகளை மீறி விளம்பரம் எழுதிய அரசியல் கட்சியினா், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியது என வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

Advertisement

கிருஷ்ணகிரி உள்கோட்டத்தில் 29 வழக்குகள், ஒசூரில் 20, பா்கூரில் 24, தேன்கனிக்கோட்டையில் 24, ஊத்தங்கரையில் 18 என மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகள் குற்றவியல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.