சாலை விபத்து: ஒருவா் பலி
சூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM
சூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா், சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து நல்லகானகொத்தப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் ராமா் சூளகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
Advertisement