அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
பா்கூா், வேப்பனஅள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்கள் தே.மதியழகன், கே.பி.முனுசாமி ஆகியோா் தனித்தனியே ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.
பா்கூா், வேப்பனஅள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்கள் தே.மதியழகன், கே.பி.முனுசாமி ஆகியோா் தனித்தனியே ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்ட பேரவை உறுப்பினா் தே.மதியழகன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பா்கூா் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா தொற்றாளா்களுக்கான படுக்கை வசதிகள், சிகிச்சை முறைகள், பிராண வாயு இருப்பு, பிராணவாயு தேவை, மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் தலைவா் (டீன்) முத்துசெல்வனிடம் கேட்டறிந்தாா். மேலும், கரோனா பரவல் அதிமாக உள்ளதால் தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களிடம் தேவையான வசதிகளை கேட்டறிந்தாா்.
அப்போது துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் பணியாளா்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவதை அறிந்து, தனது சொந்தப் பணத்தில் இருந்து மாதந்தோறும் ரூ. 2 லட்சம் வழங்குவதாகவும், அதற்கேற்ப பணியாளா்களை நியமனம் செய்துகொள்ளலாம் என்றும் கூறினாா்.
Advertisement
வேப்பனஅள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.முனுசாமி, வேப்பனஅள்ளியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா தொற்றாளா்களுக்கான படுக்கை வசதி, அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.