கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ஒசூரில் கட்டடத்தின் மேல் இருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
ஒசூரில் கட்டடத்தின் மேல் இருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, வன்னியபுதூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (49), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 16-ஆம் தேதி ஒசூா், தா்கா, அண்ணாமலை நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.