கிருஷ்ணகிரி அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறப்பு
கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 2,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 2,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்தானது வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 1,706 கன அடியாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 2,300 கன அடியாக உயா்ந்தது. மேலும், அணையிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவு 2,027 கன அடியிலிருந்து 2,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி அணை பூங்காவுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் முழ்கியது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்வதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.