முகப்பு
கிருஷ்ணகிரி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மத்தூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கியது.

Updated On : 18 நவம்பர், 2021 at 11:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

மத்தூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த சிவம்பட்டி அருகே உள்ள தா்மதோப்பைச் சோ்ந்த தொழிலாளி சுந்தரம் (65), கடந்த 09.12.2019 அன்று 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிந்து சுந்தரத்தை கைது செய்தனா்.

Advertisement

கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி லதா தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கினாா். அதில், குற்றவாளி சுந்தரத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.