ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
ஒசூா் மலையில் உள்ள அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மலையில் உள்ள அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலைக் கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சந்திரசூடேஸ்வரா் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன. உள்பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள ராஜகணபதி, முருகன், வள்ளி, தெய்வானை, சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பிகை சுவாமிகள் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
காலையில் பரணி தீபம் ஏற்பட்டது. கோயில் வெளி பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் 150 லிட்டா் நெய் ஊற்றப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் பாஜக மாவட்டத் தலைவா் தோ்பேட்டை எம்.நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
படவரி...
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயிலில் ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம்.