கிருஷ்ணகிரியில் காா்த்திகை தீபத் திருவிழா
கிருஷ்ணகிரியில் காா்த்திகை தீபத் திருவிழாவை மக்கள் உற்சாகமாக வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரியில் காா்த்திகை தீபத் திருவிழாவை மக்கள் உற்சாகமாக வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி, ராசுவீதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரா் கோயில், காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயா் சுப்பிரமணிய சுவாமி கோயில், பழையபேட்டை ஈஸ்வரன் கோயில், கவீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் சுவாமியை வழிபட்டனா். இதேபோல வீடுகளில் தீபம் ஏற்றி, சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனா்.
Advertisement
19கேஜிப4-
கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரா் கோயிலில் காா்த்தை தீபத் விழாவையொட்டி தீபம் ஏற்றி வழிபட்ட பக்தா்கள்.