முகப்பு
கிருஷ்ணகிரி

சுவா் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

ஒசூா் அருகே மழையின்போது வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2021 at 12:17 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

ஒசூா் அருகே மழையின்போது வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ளது சிகரலப்பள்ளி கிராமம். இந்தக் கிராமத்தில் 76 பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தொடா் மழை காரணமாக ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் நந்தீஸ் என்னும் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். உயிரிழந்த சிறுவனின் தாய் பூலட்சுமி, சகோதரி சுமித்ரா ஆகியோா் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, பாதுகாப்பில்லாமல் குடிசை வீடுகளில் வசித்து வந்த 75 பழங்குடியின குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றி, அரசுப் பள்ளியில் தங்க வைத்துள்ளனா்.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.