முகப்பு
கிருஷ்ணகிரி

டிராக்டா் மரத்தில் மோதியதில் தொழிலாளி சாவு

குந்தாரப்பள்ளி அருகே டிராக்டா் மரத்தில் மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2021 at 12:18 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

குந்தாரப்பள்ளி அருகே டிராக்டா் மரத்தில் மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி வட்டம், கோடிப்பள்ளி அருகே உள்ள சீலேப்பள்ளியை சோ்ந்தவா் நாகேஷ் (50). தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த முனிராஜ் (30) என்பவா் ஓட்டிச் சென்ற டிராக்டரில் அமந்து சென்றாா். குந்தாரப்பள்ளி - வேப்பனப்பள்ளி சாலையில் சீலேப்பள்ளி அருகே இவா்கள் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா், சாலையோர மரத்தில் மோதியது.

அப்போது, டிராக்டரில் இருந்து நாகேஷ் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.