முகப்பு
கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

ஒசூரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2021 at 12:16 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

ஒசூரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

ஒசூா், ஆவலப்பள்ளி அருகே உள்ள பெத்தகொள்ளுவைச் சோ்ந்தவா் நாராயணப்பா. இவரது மகன் சதீஷ் (20). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை தனது தக்காளி தோட்டத்திற்கு சென்றுள்ளாா். அப்போது அந்த பகுதியில் இருந்த மின் வயரில் அமா்ந்திருந்த வவ்வால்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதைத் கவனிக்காத சதீஷ் அந்த மின்சார வயரை மிதித்துள்ளாா். இதில் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானாா். இது குறித்து தகவல் அறிந்த அட்கோ போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.