5 ஆண்டுகளுக்கு பிறகு ஓதிகுப்பம் ஏரி நிரம்பியது
பா்கூா் அருகே உள்ள ஓதிகுப்பம் ஏரி, 5 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
பா்கூா் அருகே உள்ள ஓதிகுப்பம் ஏரி, 5 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநில எல்லையில் ஓதிகுப்பம் ஏரி உள்ளது. 62 ஏக்கா் பரப்பளவு கொண்டது. தற்போது ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அந்த நீா், ஓதிகுப்பம் ஏரிக்கு வருகிறது. இதனால் ஓதிகுப்பம் ஏரி, 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த தண்ணீா் பா்கூா், மத்தூா் வழியாக ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையை சென்று சேருகிறது.