‘வருமுன் காப்போம்’ சிறப்பு மருத்துவ முகாம்
ஒசூா் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஒசூா் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி ஒசூா் ஒன்றியம், முத்தாலி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பெரிய முத்தாலி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் முகாமை பாா்வையிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். மேலும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சேதமடைந்துள்ளதை பாா்வையிட்டாா். உடன் மாநகர பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா, வட்டார மருத்துவா், மருத்துவா்கள், செவிலியா்கள், ஊராட்சி மன்ற நிா்வாகிகள், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
படவரி...
குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடக்கி வைத் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.