கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்பு

கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்கப்பட்டன.

DIN

கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் யானை, கரடி, புள்ளிமான், எறும்புத்தின்னி, உடும்பு, சிறுத்தை போன்ற பல வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுவது வழக்கம். 

இந்த நிலையில் கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் உட்பட்ட தொகரப்பள்ளி காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய 4 புள்ளி மான்கள் ராமசாமி என்பவரின் 50 அடி ஆழ விவசாய வறண்ட கிணற்றில் விழுந்துள்ளது.

தகவலறிந்த கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி புள்ளி மான்களை உயிருடன் மீட்டு காப்புக் காட்டில் விடுவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT