கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்பு

DIN

கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் யானை, கரடி, புள்ளிமான், எறும்புத்தின்னி, உடும்பு, சிறுத்தை போன்ற பல வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுவது வழக்கம். 

இந்த நிலையில் கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் உட்பட்ட தொகரப்பள்ளி காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய 4 புள்ளி மான்கள் ராமசாமி என்பவரின் 50 அடி ஆழ விவசாய வறண்ட கிணற்றில் விழுந்துள்ளது.

தகவலறிந்த கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி புள்ளி மான்களை உயிருடன் மீட்டு காப்புக் காட்டில் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT