முகப்பு
கிருஷ்ணகிரி

மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவா் பலி

கிருஷ்ணகிரி அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 23 அக்டோபர், 2021 at 4:11 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:55 AM

கிருஷ்ணகிரி அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த காா்த்திகேயன் (30), பா்கூா், குருவிநாயனப்பள்ளியை அடுத்த பசவண்ணகோயில் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திர ராவ் (57) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி- குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனா்.

சின்னமட்டாரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் வேகமாக மோதியதில் காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.