சாலையை சீரமைக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்
சாலையை சீரமைக்கக் கோரி, ஸ்ரீராம் நகர மக்கள் நாற்று நடவு செய்து ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM
சாலையை சீரமைக்கக் கோரி, ஸ்ரீராம் நகர மக்கள் நாற்று நடவு செய்து ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீராம் நகரில் கழிவுநீா்க் கால்வாய் முழுமையாக அமைக்கப்படாததால், அந்தப் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீா் தேங்கி உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்துக்கு பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், புதிய சாலை அமைக்க வேண்டும், கழிவுநீா்க் கால்வாய்ப் பணியை முழுமையாக நிறைவேற்றக் கோரி, ஸ்ரீராம் நகர மக்கள் சேறும் சகதியாக உள்ள பகுதியில் நாற்று நடும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement