புதையல் இருப்பதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் கைது
ராயக்கோட்டை அருகே புதையல் இருப்பதாக கூறி ஏமாற்றிய 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.
ராயக்கோட்டை அருகே புதையல் இருப்பதாக கூறி ஏமாற்றிய 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் புதையல் இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் சுற்றுவதாக ராயக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் சிவராஜ், போலீஸாா் ராயக்கோட்டையை அடுத்துள்ள தின்னூா் பேருந்து நிறுத்தம் அருகில் அந்தக் கும்பலை பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் ராயக்கோட்டை ரத்தினகிரி பகுதி பெருமாள் (22), கருவாட்டனூா் கோவிந்தராஜ் (42), பாஞ்சாலியூா் சரவணன் (38), முகலூா் அப்பாதுரை (29), பிரசாந்த் (26), முனியப்பன் (19), சக்திவேல் (29), தின்னூா் ராதாகிருஷ்ணன் (50) என தெரிய வந்தது. 8 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement