கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைப் பணியை விரைவுபடுத்த எம்.பி. வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரியைச் சந்தித்து அ.செல்லக்குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரியைச் சந்தித்து அ.செல்லக்குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புது தில்லியில் கடந்த 26-ஆம் தேதி மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியைச் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தேன். அப்போது, கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை முடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன்டள்ளி கிராமத்தில் 4 சாலைகள் சந்திக்கும் பகுதியில் விபத்துகளைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், தனது கோரிக்கைகள் குறித்து உடனே நடவடக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் உறுதியளித்துள்ளதாகவும் அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement