முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

 ஒசூா் சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ. 80,000 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 30 அக்டோபர், 2021 at 12:27 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

 ஒசூா் சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ. 80,000 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் சிப்காட் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜெயக்குமாா், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் சுல்தான் ஆகியோா் தலைமையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 80,000 ரொக்கப் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த அலுவலகத்தில் சிதறிக் கிடந்த பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

கடந்த வாரம் கா்நாடகத்தில் இருந்கு தமிழகத்துக்குள் வரும்போது உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்த நிலையில், இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.