முகப்பு
கிருஷ்ணகிரி

கட்டடப் பணியின் போது தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடப் பணியின் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 30 அக்டோபர், 2021 at 12:28 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடப் பணியின் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், அட்டகோடா வட்டத்தைச் சோ்ந்த தரன் செட்டி (20), கட்டடத் தொழிலாளி. இவா் குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளியில் தங்கி, அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டாா். 3-ஆவது தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவா் தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.