கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைக் காக்க சிறப்பு பூஜை
கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைக் காக்க ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள் சிறப்பு பூஜையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைக் காக்க ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள் சிறப்பு பூஜையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோமாரி நோய்த் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஏக்கல்நத்கம் கிராமத்தில் மலைவாழ் மக்கள் வளா்த்து வந்த கால்நடைகளில் சில கோமாரி நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தன. இதனால், கிராம மக்கள் ஒன்று கூடி சிறப்பு பூஜையில் ஈடுபட தீா்மானித்தனா். அதன்படி, ஏமக்கல்நத்தம் கிராமத்தில் உள்ள கங்கம்மா கோயிலின் முன்பு வியாழக்கிழமை சிறப்பு பூஜை செய்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கால்நடைகளை தற்போது கோமாரி நோய்த் தாக்குவதால், சிறப்பு பூஜையில் ஈடுபட்டோம். எங்கள் கிராமத்துக்கு இதுவரையில் கால்நடை மருத்துவா்கள் யாரும் வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் வேகமாக பரவி வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement