முகப்பு
கிருஷ்ணகிரி

போகனப்பள்ளியில் எம்எல்ஏ குறைக்கேட்பு

கிருஷ்ணகிரி ஒன்றியம், போகனப்பள்ளியில் அதிமுக எம்எல்ஏ. அசோக்குமாா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

Updated On : 16 செப்டம்பர், 2021 at 11:54 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

கிருஷ்ணகிரி ஒன்றியம், போகனப்பள்ளியில் அதிமுக எம்எல்ஏ. அசோக்குமாா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளியைத் தொடங்க வேண்டும், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும். முதியவா்கள் ஓய்வூதிய நிதி பெற உதவ வேண்டும், கிராமத்தில் உயா் மின்கோபுர வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.

பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவா், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி தொடங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க குடிநீா்த் தொட்டி அமைத்து தருவதாகவும் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

பட விளக்கம் (16கேஜிபி4):

போகனப்பள்ளியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.அசோக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.