கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில், பல துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மலா்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முருகன், ராஜகோபால், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், வழங்கல் அலுவலா் கோபு உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதியேற்பு நிகழ்வு.
Advertisement