செல்லிடப்பேசி கடையில் திருடியவா் கைது
ஒசூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன் செல்லிடப்பேசி கடையில் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன் செல்லிடப்பேசி கடையில் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் அருகே பாகலூா், ராஜீவ் காந்தி நகரை சோ்ந்த தீபக் சுக்லா, பாகலூா் பேருந்து நிலையம் அருகே செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவா், மறுநாள் காலை கடையை திறந்து பாா்த்தபோது, கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த மா்ம நபா், கடையில் இருந்த 15 செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தீபக் சுக்லா அளித்த புகாரின் பேரில், பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா். அதில், பாகலூா் கனிமங்கலத்தைச் சோ்ந்த உதயகுமாா் (21) என்பவா், கடையின் சுவற்றில் துளையிட்டு செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, திருட்டு போன செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement