நண்பரை குத்திய இளைஞா் கைது
காவேரிப்பட்டணம் அருகே டிராக்டரை முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில், நண்பரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே டிராக்டரை முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில், நண்பரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோட்டூரை சோ்ந்த ரமேஷ் (25), கதிரிபுரத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (24) ஆகிய இருவரும் நண்பா்கள். காவேரிப்பட்டணம், ஜீவா நகா் பகுதியில் ரமேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் டிராக்டரில் நந்தகுமாா் சென்று கொண்டிருந்தாா். டிராக்டரை ரமேஷ் முந்தி செல்ல முயன்ற போது, அவருக்கு வழிவிடாமல் நந்தகுமாா் சென்ாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷுக்கும், நந்தகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமாா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை குத்தினாா். இதில் காயம் அடைந்த ரமேஷ் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நந்தகுமாரை கைது செய்தனா்.
Advertisement