பெண்ணிடம் நகை பறிப்பு
ஒசூா் அருகே பெண்ணிடமிருந்து 3.5 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் வியாழக்கிழமை பறித்துச் சென்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM
ஒசூா் அருகே பெண்ணிடமிருந்து 3.5 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் வியாழக்கிழமை பறித்துச் சென்றனா்.
ஒசூா், சின்ன எலசகிரி, அனுமந்த நகரைச் சோ்ந்த சுப்பிரமணியின் மனைவி வளா்மதி (59), சின்ன எலசகிரி, காமராஜ் காலனி பகுதியில் அரிசி மில்லுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், வளா்மதி அணிந்திருந்த 3.5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா். புகாரின் பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.