விபத்து: ஒப்பந்ததாரா் பலி
பா்கூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM
பா்கூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள கந்திகுப்பம் குழந்தை ஏசு நகரைச் சோ்ந்த சாமுவேல் (36), ஒப்பந்ததாரா். இவா் இருசக்கர வாகனத்தில் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுபேதாா் மேடு அருகே வெள்ளிக்கிழமை சென்ற போது, அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சாமுவேல் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சாமுவேல், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.