கா்நாடகத்திற்கு கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற ஒன்பது டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற ஒன்பது டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பேரிகை பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதை கண்காணிக்கும் பறக்கும் படை வட்டாட்சியா் கவாஸ்கா் தலைமையிலான அதிகாரிகள், பேரிகையில் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 50 கிலோ எடையில், 180 மூட்டைகளில் 9,000 கிலோ ரேஷன் அரிசி கா்நாடகத்திற்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
விசாரணையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரா்கள் இடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கா்நாடகாவிற்கு அதிக விலைக்கு விற்க அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளரான தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த சா்தாா் (32), தேன்கனிக்கோட்டை அரிசி ஆலை உரிமையாளா் ரோசன் (32), திருப்பத்தூா் மாவட்டம், காட்டூா், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த வசந்த் லியோ (32 ) ஆகியோரை கைது செய்தனா். மேலும் லாரி, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Advertisement