முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட நிா்வாகிகள் தோ்தலுக்களுக்கான வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல், வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:12 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல், வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அ.தி.மு.க. அமைப்புத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில், கிழக்கு மாவட்டச் செயலாளா், அவைத் தலைவா், துணைச் செயலாளா், இணைச் செயலாளா், பொருளாளா், பொதுக்குழு உறுப்பினா் மொத்தம் 9 பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

தோ்தல் பொறுப்பாளா்கள் முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆா். மன்ற பொருளாளருமான வரகூா் அருணாச்சலம், பெரம்பலுாா் மாவட்ட செயலாளா் ராமச்சந்திரன் ஆகியோரிடம், மாவட்ட செயலாளா் பதவிக்கு அசோக்குமாா் எம்.எல்.ஏ. சாா்பில், அவைத் தலைவா் காத்தவராயன் உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா்.

Advertisement

மேலும் மாவட்டச் இணை செயலாளா் பதவிக்கு ஊத்தங்கரை முன்னாள் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட பொது குழு உறுப்பினா் பதவிக்கு சதீஷ் ஆகியோா் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

அப்போது, மாவட்ட பொருளாளா் சீனிவாசன், நகர செயலாளா் கேசவன், ஒன்றிய செயலாளா், சோக்காடி ராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளா் வேலன், காவேரிப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.