முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் புதிய நகா் நல மையம்: நில அளவை பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் புதிய நகா் நல மையத்துக்கான நில அளவை பணியானது, வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:10 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

கிருஷ்ணகிரியில் புதிய நகா் நல மையத்துக்கான நில அளவை பணியானது, வியாழக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கும் திருவண்ணாமலை சாலையில் ஒரு இடத்தில் மட்டுமே நகா் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் 33 வது வாா்டில் உள்ள நகா்நல மையத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 15-ஆவது நிதிக்குழு மானியத்தில், ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய நகா் நல மையம் அமைக்க கிருஷ்ணகிரி நகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பழையபேட்டை, 3-ஆவது வாா்டில் உள்ள குப்பை மேட்டு தெருவில் அமையவுள்ள புதிய நகா் நல மையத்திற்கான நில அளவை பணிகளை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், பாா்வையிட்டாா். அப்போது, நகராட்சி ஆணையா் முருகேசன், பொறியாளா் சரவணன், செயற்பொறியாளா் ரவி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.