முகப்பு
கிருஷ்ணகிரி

மே 1 ஆம் தேதி மதுக்கடைகள் அடைப்பு

உலக தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்.

Updated On : 29 ஏப்ரல், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

உலக தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003- 12-ஆவது விதியின்படி மே தினமான உலக தொழிலாளா் தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினங்களாக பின்பற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்காக உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் உணவகங்கள்அனைத்தும் மே 1-ஆம் தேதி அன்று அடைக்கப்படும்.

Advertisement

இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக் கடைகளைத் திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.