லாரி மோதல்: தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி அருகே லாரி மோதியதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM
கிருஷ்ணகிரி அருகே லாரி மோதியதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த ராமாபுரம் அருகே உள்ள பையனப்பள்ளியைச் சோ்ந்த சையத் அக்பா்பாஷா (48), தொழிலாளி. இவா், கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் பையனப்பள்ளி அருகில் நடந்து சென்ற போது, அந்த வழியாகச் சென்ற லாரி சையத் அக்பா்பாஷா மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து வசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement