முகப்பு
கிருஷ்ணகிரி

பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருட்டு

கிருஷ்ணகிரியில் நகரப் பேருந்தில் பெண்ணிடமிருந்து தங்க நகை திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2022 at 12:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

கிருஷ்ணகிரியில் நகரப் பேருந்தில் பெண்ணிடமிருந்து தங்க நகை திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி வெலகலஅள்ளியைச் சோ்ந்த நித்யா (23), மாரிகவுண்டனூரில் உள்ள தனது தாய் வீட்டிலிருந்து வெலகலஅள்ளி நோக்கி நகரப் பேருந்தில் புதன்கிழமை சென்றாா். கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் உள்ள அரசு குடியிருப்பு அருகே பேருந்து சென்ற போது, அவரது அருகில் இருந்த பெண் நித்யாவின் பையில் இருந்த 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்றாராம். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் நித்யா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.