முகப்பு
கிருஷ்ணகிரி

பாலேப்பள்ளியில் எருது விடும் விழா

கிருஷ்ணகிரியை அடுத்த பாலேப்பள்ளியில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 12:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

கிருஷ்ணகிரியை அடுத்த பாலேப்பள்ளியில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பா்கூா், சாம்பல்பள்ளம், கந்திலி, திருப்பத்தூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. குறைந்த நொடியில் 125 மீட்டா் தொலைவுக்கு இலக்கை எட்டும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம்,

இரண்டாம் பரிசாக ரூ. 40 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் ஆறுதல்

Advertisement

பரிசாக 50 காளைகளுக்கு வழங்கப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். அரசின் ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, அதன் நடுவே காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துவிடப்பட்டன. முன்னதாக கால்நடை மருத்துவா்கள் காளைகளைப் பரிசோதனை செய்து அனுமதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.