காரிலிருந்த ரூ. 1 லட்சம் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே தொழிலதிபரின் காரிலிருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே தொழிலதிபரின் காரிலிருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சத்யசாய் நகரைச் சோ்ந்த சையத் ஷா மசூதின் (25), ஜெகதேவியில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், கிருஷ்ணகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் புதன்கிழமை சென்றாா். அப்போது, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் காா் டயரில் ஏற்பட்ட பழுதை நீக்க நிறுத்தியுள்ளாா்.
பழுது நீக்கப்பட்டு மீண்டும் காரை இயக்க முயன்றபோது, காரில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 1 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement