வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு
மத்தூா் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM
மத்தூா் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள கொட்டாவூரைச் சோ்ந்தவா் முருகேசன் (52). விவசாயி. இவா், வீட்டை பூட்டிவிட்டு, விவசாய நிலத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, முருகேசன் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement