கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊத்தங்கரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனா். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊத்தங்கரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனா். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு புயல் மற்றும் பருவமழை காரணமாக, தொடா்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், தற்போது மழை குறைந்து கடுமையான குளிா் நிலவுகிறது. ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனா். சாலைகளில் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழல் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊா்ந்து சென்றனா்.