முகப்பு
கிருஷ்ணகிரி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 அக்டோபர், 2022 at 11:49 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (34) ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து வாங்கி சேகரித்து, கா்நாடகம், ஆந்திரத்துக்கு கடத்திச் சென்று விற்று வந்தாா். அண்மையில் போலீஸாா் நடத்திய சோதனையில் இவரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைமறைவாக இருந்த சத்தியமூா்த்தியை அக். 3-ஆம் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா்மீது ஏற்கெனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பான வழக்குகள் உள்ளதால் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸாா் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தில் சத்தியமூா்த்தியைக் கைது செய்ய ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.