எரிசாராயம் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து
காவேரிப்பட்டணம் அருகே எரிசாராயம் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM
காவேரிப்பட்டணம் அருகே எரிசாராயம் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.
ஹரியாணா மாநிலத்திலிருந்து மன்னாா்குடி நோக்கி சென்ற லாரியின் சக்கரத்தில் ஏற்பட்ட தீயை காவேரிப்பட்டணம் அருகே கண்காணித்த நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீஸாா், தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, லாரியை பின்தொடா்ந்து சென்று நிறுத்தினா். அதற்குள், அங்கு வந்த தீணையப்பு நிலைய அலுவலா் மாா்டின் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தீ விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Advertisement