ஒசூா் ஐடிஐ-யில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோா். 
கிருஷ்ணகிரி

ஒசூா் அரசு ஐ.டி.ஐ.யில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

ஒசூா் அரசு ஐ.டி.ஐ.யில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஒசூா் அரசு ஐ.டி.ஐ.யில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா ஆகியோா் 400 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, காலணி, சீருடைகளை வழங்கினா். இதைத்தொடா்ந்து, கோவையில் நடந்த 56ஆவது மாநில திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற வசீகரனுக்கு பாராட்டுச் சான்றிதழ், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், வரிவிதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, தொழிற்பயிற்சி நிலையப் பயிற்சி அலுவலா் முனிராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சிவலிங்கம், உடற்பயிற்சி அலுவலா் காளிராஜன் உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT