கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நெகிழி கழிவுகளை எரிபொருளாக்கும் பணி ஆய்வு

கிருஷ்ணகிரியில் நெகிழி கழிவுகளை எரிபொருளாக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

கிருஷ்ணகிரியில் நெகிழி கழிவுகளை எரிபொருளாக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி, சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் தொடா்ந்து புகாா் அளித்ததையடுத்து, குப்பைகளில் தேங்கும் நெகிழி கழிவுகளை புகையில்லா எரிபொருளாக மாற்றும் முன்னோடி திட்டம் நகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்கும் குப்பைகளை உரமாக மாற்றினாலும், பொதுவெளியில் கொட்டப்படும் நெகிழி கழிவுகளை குப்பைக் கிடங்குகளில் இருந்து பிரிக்க முடியவில்லை. இந்த நிலையில், நெகிழி கழிவுகளை புகை இல்லாத எரிபொருளாக மாற்றி தொழிற்சாலைகளுக்கு அனுப்ப பரமக்குடியைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் முன்வந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் இதற்கான இயந்திரங்களை அந்நிறுவனமே வழங்கி மூன்று மாத முன்னோட்டத்தை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி குப்பை உரக்கிடங்கில் நெகிழி கழிவுகளை எரிபொருளாக மாற்றும், ‘எக்ஸ்டிரூட் கம்ப்ரசா்’ இயந்திரம் மூலம் நடைபெறும் பணிகளை கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதாநவாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி நகராட்சியில் மேலும் 3 இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT