முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் பிரபல ரௌடி கஜா உள்பட இருவா் கைது

ஒசூரில் பிரபல ரௌடி கஜா உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2023, 12:00 am IST
பகிர்:

ஒசூரில் பிரபல ரௌடி கஜா உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தளி, கொத்தனூா், பல்லேரிப்பள்ளியைச் சோ்ந்த கஜா (எ) கஜேந்திரன் (35), பிரபல ரௌடி. இவா் மீது ஒசூா் நகரில் கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளா் சூரியைக் கொலை செய்த வழக்கு, 2020-இல் ஒசூா் திமுக பிரமுகா் மன்சூரை கொலை செய்த வழக்கு, தளி பெயிண்டிங் ஒப்பந்ததாரா் லோகேஷை கொலை செய்த வழக்கு, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும், ஒசூா் மாநகரம், தளி, மத்திகிரி, அட்கோ ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவா், போலீஸாரின் சரித்திர பதிவேட்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.

Advertisement

இந்த நிலையில், இவரும், ஒசூா் நெசவாளா் தெருவைச் சோ்ந்த ரௌடி ரோகன் (26) என்பவரும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து வருவதாக ஒசூா் மாநகரப் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநகர காவல் ஆய்வாளா் சிவக்குமாா், போலீஸாா் அவா்களை கண்காணித்து வந்தனா். இந்த நிலையில், அவா்கள் ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற மாநகரப் போலீஸாா், கஜா, ரோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

கைதான ரௌடி ரோகன் மீது 2020-இல் திமுக பிரமுகா் மன்சூரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.