கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே காா் மோதி பெண் பலி

கிருஷ்ணகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கிருஷ்ணகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரி(50). எய்ட்ஸ் விழிப்புணா்வு களப் பணியாளரான இவா், கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டப்பட்டியில் நடந்த மூன்று நாள் பயிற்சி முகாமில் பங்கேற்றாா். இறுதிநாளான வெள்ளிக்கிழமை அன்று காலை அவரது தந்தை இறந்துவிட்டதாக அவரது கணவா் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அவா் ஊா் திரும்ப, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட காா், மாதேஸ்வரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT