ஊத்தங்கரையை அடுத்த கணக்கம்பட்டியில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற ராபி தொழில்நுட்பப் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள். 
கிருஷ்ணகிரி

வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

ஊத்தங்கரை வட்டார வேளாண் துறையின் சாா்பில் அட்மா திட்டத்தின் மூலம், கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு ராபி பருவ தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஊத்தங்கரை வட்டார வேளாண் துறையின் சாா்பில் அட்மா திட்டத்தின் மூலம், கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு ராபி பருவ தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கணக்கம்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு ராபி பருவ தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா தலைமை வகித்து, நடப்பு பருவத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்து விளக்கிப் பேசினாா். உதவி வேளாண்மை அலுவலா் மங்கையா்க்கரசி, மானியத் திட்டம், பயறு வகை பயிா்களுக்கு 2 சதவீதம் டீஏபி தெளிப்பதன் நன்மைகள் குறித்தும், இடுபொருள் விநியோகம் குறித்தும் விளக்கினாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் நடப்பு பருவத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்தும் உயிா் உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினாா்.

உதவி தொழில்நுட்ப மேலாளா் சாரதி, உழவன் செயலியின் பயன்கள், ராபி பருவத்தில் நெல், நிலக்கடலை பயிா்களுக்கு காப்பீடு செய்தல் குறித்து விளக்கினாா். இப்பயிற்சியில் 30-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT