கிருஷ்ணகிரி

2 இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவா் பலி

உத்தனப்பள்ளி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்; 2 பள்ளி மாணவா்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

DIN

உத்தனப்பள்ளி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்; 2 பள்ளி மாணவா்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒசூா் தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன். இவரது மகன் சந்தோஷ் (19). இவா் ஒசூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 25-ஆம் தேதி இரவு இவா் இருசக்கர வாகனத்தில் ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் உப்பரத்தமண்டரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா். அந்த நேரம் எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சந்தோஷ் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ், ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். அவருடன் சென்ற பிளஸ் 1 மாணவா்கள் மனோஜ் (17), திம்மராஜ் (17) ஆகியோா் காயம் அடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவ்விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT