தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோ 
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் தீரன் சின்னமலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 219 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Din

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 219 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஊத்தங்கரையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொங்கு நாடு மக்கள் தேதிய கட்சியின் மாவட்டச் செயலாளா் வஜ்ஜிரவேல் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். ஊத்தங்கரையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

மாவட்ட கொங்கு பேரவைத் தலைவா் இளையராஜா, மாவட்ட துணை தலைவா் தண்டபாணி, கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், மேற்கு ஒன்றிய பொருளாளா் செந்தில்குமாா், வடக்கு ஒன்றிய பொருளாளா் சதீஷ்குமாா், நகர செயலாளா் வெங்கடேசன் உள்பட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT