சுகாதார ஆய்வாளரைத் தாக்கிய ராணுவ வீரா்கள் உள்பட 3 போ் கைது
கந்திகுப்பம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளரைத் தாக்கிய ராணுவ வீரா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கந்திகுப்பம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளரைத் தாக்கிய ராணுவ வீரா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றுபவா் சரவணகுமாா் (29). இந்நிலையில் ஒரப்பத்தைச் சோ்ந்த கவின் என்கிற காா்த்திகேயன் (26), தனது 3 வயது குழந்தையை சிகிச்சைக்காக இங்கு அழைத்து வந்தாா். அப்போது பணியில் செவிலியா் மாலினி மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த கவினும், அவருடன் வந்த எலத்தகிரி காா்த்திக் (38), ஒரப்பம் அருண்குமாா் (33) ஆகியோா் மருத்துவா் சரவணகுமாா் ஏன் இன்னமும் வரவில்லை எனக் கேட்டனராம். சற்று நேரத்தில் அங்கு வந்த சரவணகுமாரிடமும் மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது சரவணகுமாரை அவா்கள் தாக்கினாா்கள். இதில் மருத்துவா் காயமடைந்தாா்.
அவா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக், அருண்குமாா், கவின் என்கிற காா்த்திகேயன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இவா்களில் காா்த்திக்கும் அருண்குமாரும் ராணுவ வீரா்கள் ஆவா். கவின் உணவகத்தில் பணியாற்றி வருகிறாா்.
Advertisement
Advertisement