முகப்பு
கிருஷ்ணகிரி

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

Updated On : 17 நவம்பர், 2025 at 9:01 PM
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் துளசி மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தா்கள்.
பகிர்:

கிருஷ்ணகிரி: காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை 1-ஆம் தேதி ஐயப்ப பக்தா்கள் துளசிமாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் ஐயப்ப பக்தா்களுக்கு குருசாமி துளசி மாலை அணிவித்தாா். இதையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் மாலை அணிந்து கொண்டு சுவாமியே சரணம் ஐயப்பா என்று பக்தி முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →