நாமக்கல்

கொல்லிமலை விவசாயிகளுக்கு பழப்பயிர் சாகுபடி பயிற்சி

DIN

பழப் பயிர்களில் அடர்நடவு மற்றும் கிளைகள் பரமாரிப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்பப் பயிற்சி முகாம் கொல்லிமலையில் அண்மையில் நடந்தது.
  அரியூர்நாடு கிராமத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை வேளாண் உதவி இயக்குநர் சுப்ரமணியம் தலைமை வகித்து, வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், பழப் பயிர்களில் அடர்நடவு மற்றும் கிளைகள் பராமரிப்பின் முக்கியத்துவம், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கினார்.
 தோட்டக் கலை உதவி இயக்குநர் சின்னதுரை, கொல்லிமலையில், பலா, அண்ணாசி, வாழை போன்ற பழ வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுவதால், பழ வகைகளின் உற்பத்தியைப் பெருக்க பழப் பயிர்களில் அடர்நடவு மற்றும் கிளைகள் பராமரிப்பு அவசியம் என்று தெரிவித்தார்.   முகாமில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தோட்டக் கலை உதவி அலுவலர்கள் மாதேஸ்வரன், வெற்றிவேல், சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்திருந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT